ஆப்நகரம்

'நான் ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை', ஓட்டு போடும்போது சத்திய பிரமாணம்?

தமிழகத்தில் ஓட்டுக்காக பணம் வாங்கவில்லை என்று வாக்காளர்கள் சத்திய பிரமாணம் செய்ய சாத்தியமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டது.

Samayam Tamil 2 Mar 2021, 6:54 pm
ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என்று வாக்காளர்கள் வாக்கு பதிவின்போது சத்திய பிரமாணம் செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு வந்தது.
Samayam Tamil voter


அப்போது இந்த வழக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவின்போது ஒவ்வொரு வாக்காளர்களையும் சத்திய பிரமாணம் செய்ய வைப்பது சாத்தியமற்றது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். ஆனால், இதுகுறித்து மனுதாரர் தமிழக அரசை நாடலாம் என்றும் தெரிவித்தனர்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கியுள்ளதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் முழுவீச்சில் இறங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் மட்டுமில்லாமல் தேர்தல் சமயங்களில் நடக்கும் சட்ட விரோத செயல்களை தடுக்க சாமானியரும் கூட நீதிமன்றத்தை நாடி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதில் பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றத்தால் ஏற்க முடியாமலும் போகலாம். அப்படியான வழக்கத்தைதான் மேற்படி பார்த்தோம்.

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் தேதி இதுதான்: உதயநிதி போட்டியிடுகிறார்!

ஓட்டுக்கு காசு வாங்கவில்லை என்று வாக்காளர்கள் சத்திய பிரமாணம் செய்ய உத்தரவிட்டாலும், தேர்தல் நேரத்தில் பணம் வாங்குவதையும், கொடுப்பதையும் முற்றிலுமாக தடுத்து விட முடியாது. ஆனால், குறைந்தபட்சமாக வேட்பாளர்களை அந்தந்த தொகுதி மக்களுக்கு மத்தியில் நிற்க வைத்து, 'ஓட்டுக்கு நான் பணம் தர மாட்டேன்' என்று சத்திய பிரமாணம் செய்ய வைக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த செய்தி