ஆப்நகரம்

காளீஸ்வரி குழும நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

காளீஸ்வரி குழும நிறுவனங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

TNN 18 May 2017, 9:06 am
சென்னை: காளீஸ்வரி குழும நிறுவனங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil it raid at kaleesuwari refinery oil private limited continuous second consecutive day
காளீஸ்வரி குழும நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை


கோல்டு வின்னர் சமையல் எண்ணெய், காளிமார்க் குளிர்பானம் உள்பட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் பிரபல தனியார் நிறுவனம் காளீஸ்வரி. இந்நிலையில், சென்னை, மதுரை, திண்டுக்கல், வேலூர் உள்பட காளீஸ்வரி குழுமதுக்கு சொந்தமான 54 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன், உரிமையாளர் வீடு, அலுவலகம் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனை, முறையான வருமானவரி தாக்கல் செய்யாததால் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு குளிர்பானகளை புறக்கணித்து விட்டு தமிழக நிறுவனமான காளிமார்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பானங்களை பருகுமாறு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் பதிவிட்டு வந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
IT raid at Kaleesuwari Refinery Oil Private Limited continuous second consecutive day

அடுத்த செய்தி