ஆப்நகரம்

பரணி சில்க்ஸ் குழுமத்தில் காலை முதல் வருமானவரித்துறை சோதனை

கோவை மற்றும் ஈரோடு பரணி சில்க்ஸ் குழுமக் கடைகளில் , வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 9 Feb 2018, 3:55 pm
கோவை மற்றும் ஈரோடு பரணி சில்க்ஸ் குழுமக் கடைகளில் , வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil it raid in bharani silks from morning
பரணி சில்க்ஸ் குழுமத்தில் காலை முதல் வருமானவரித்துறை சோதனை


ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம் பரணி சில்க்ஸ்,ஈரோட்டில் மட்டும் இந்த நிறுவனத்துக்கு மூன்று கிளைகள் உள்ளன. அதேபோல, கோவையில் அவினாசி சாலையிலும் பரணி சில்க்ஸ் கிளை உள்ளது.

இந்நிலையில் , இந்த நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, பரணி சில்க்ஸ் , பரணி பட்டு, பரணி ரெடிமேடு, மலர் சில்க்ஸ் , மங்கை நைட்டீஸ் , கலாமந்திர் உள்ளிட்ட நிறுவனங்களில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. நல்லதம்பி மற்றும் அவரது மகன்கள் ரவி, பொன்னுசாமி மற்றும் சேகர் ஆகியோர்தான் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி