சசிகலாவின் குடும்பத்தினா் நண்பா்கள் உள்ளிட்டோா் தொடா்பான இடங்களில் வருமான வாி சோதனை நேற்று தொடங்கிய நிலையில் 147 இடங்களில் இன்றும் சோதனை தொடா்கிறது.
கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மற்றும் வரிஏய்ப்பு புகார்கள் என்ற பெயாில் சசிகலா, தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடு மற்றும் நிறுவனங்களில் நேற்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா என மொத்தம் 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 1800 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம், இளவரசியின் மகன் விவேக் வீடு, மகள் கிருஷ்ணபிரியாவின் வீடு, தஞ்சையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவனின் வீடு, டாக்டர் வெங்கடேசின் நண்பர் ராஜேஸ்வரனின் வீடு, கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகர் வீடு, நாமக்கலில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் மற்றும் அவரிடம் பணியாற்றிய பாண்டியனின் வீடு, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மன்னார்குடி வீடு, நீலகிரி மாவட்டம் கோடநாடு கர்சன் பகுதியில் உள்ள க்ரீன் டீ எஸ்டேட், வழக்கறிஞர் செந்திலின் நண்பர் பால சுப்ரமணியனின் வீடு, டிஎம்பிஎஸ்சி உறுப்பினர்கள் ஏ.வி.வேலுவின் வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இது தவிர புதுச்சேரி ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் நகைக்கடை, ஆரோவில் அருகில் உள்ள தினகரனின் பண்ணை வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள திவாகரனின் கார் டிரைவர் வினோத் வீட்டிலும் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று சோதனை நடந்த 187 இடங்களில் 40 இடங்களில் சோதனை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 147 இடங்களில் 2வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. நேற்று கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இடங்களிலும் மீண்டும் சோதனை துவக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மற்றும் வரிஏய்ப்பு புகார்கள் என்ற பெயாில் சசிகலா, தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடு மற்றும் நிறுவனங்களில் நேற்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா என மொத்தம் 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 1800 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம், இளவரசியின் மகன் விவேக் வீடு, மகள் கிருஷ்ணபிரியாவின் வீடு, தஞ்சையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவனின் வீடு, டாக்டர் வெங்கடேசின் நண்பர் ராஜேஸ்வரனின் வீடு, கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகர் வீடு, நாமக்கலில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் மற்றும் அவரிடம் பணியாற்றிய பாண்டியனின் வீடு, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மன்னார்குடி வீடு, நீலகிரி மாவட்டம் கோடநாடு கர்சன் பகுதியில் உள்ள க்ரீன் டீ எஸ்டேட், வழக்கறிஞர் செந்திலின் நண்பர் பால சுப்ரமணியனின் வீடு, டிஎம்பிஎஸ்சி உறுப்பினர்கள் ஏ.வி.வேலுவின் வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இது தவிர புதுச்சேரி ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் நகைக்கடை, ஆரோவில் அருகில் உள்ள தினகரனின் பண்ணை வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள திவாகரனின் கார் டிரைவர் வினோத் வீட்டிலும் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று சோதனை நடந்த 187 இடங்களில் 40 இடங்களில் சோதனை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 147 இடங்களில் 2வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. நேற்று கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இடங்களிலும் மீண்டும் சோதனை துவக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.