ஆப்நகரம்

அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவளித்ததற்கு இதுதான் காரணம்: மு.க.ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் வீட்டில் நடந்த வருமான வரிசோதனையின் விளைவாகத்தான், அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 21 Jul 2018, 7:00 am
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் வீட்டில் நடந்த வருமான வரிசோதனையின் விளைவாகத்தான், அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவளித்ததற்கு இதுதான் காரணம்: மு.க.ஸ்டாலின்
அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவளித்ததற்கு இதுதான் காரணம்: மு.க.ஸ்டாலின்


பிரதமா் நரேந்திர மோடியின் பாஜக அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வந்தன. இந்த தீா்மானம் மீது மக்களவையில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

வாக்கெடுப்புக்கு முன்னதாக நேற்று காலை முதலே தீா்மானம் மீது விவாதம் நடைபெற்றது. காலை முதல் எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரவு 9 மணிக்கு மேலாக பதில் அளிக்கத் தொடங்கினார். சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக பேசிய மோடி, 4 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு செய்த சாதனைகள் குறித்தும், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நடந்து கொண்ட விதம் குறித்தும் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், நம்பிக்கை இல்லா தீா்மானத்திற்கு 126 உறுப்பினா்கள் ஆதரவாகவும், நம்பிக்கை இல்லா தீா்மானத்தை எதிர்த்து 325 உறுப்பினா்களும் வாக்களித்தனா். இதன் மூலம் நம்பிக்கை இல்லா தீா்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தார்மீக ரீதியில் ஆதரவு தெரிவித்த திமுக கட்சியில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட், 15வது நிதி ஆணையம், ஜிஎஸ்டி, இந்தி திணிப்பு மற்றும் மத ரீதியான அரசியல் என பல பிரச்சனைகள் இருக்கையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் மோடி அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்திருப்பது, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான உறவை காட்டுகிறது. முதல்வரின் உறவினர் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனைக்கான நோக்கம் இப்போது நிறைவேறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி