ஆப்நகரம்

சென்னையில் பீட்சா மாவை பறக்கவிட்டு சிலிர்ப்பை ஏற்படுத்திய இத்தாலி சமையலர்

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பீட்சா தயாரிப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. முக்கியமாக மிருதுவாக இருக்கும் பீட்சாவிற்கு மாவு பிசைவதில் பெரிய கலையே இருக்கிறது.

Samayam Tamil 31 Jan 2019, 10:02 pm
பீட்சா சாப்பிடும் போது எளிதாக இருந்தாலும், அதை தயாரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. குறிப்பாக அதற்கான மாவு பிசைவதிலும், சரியான பதத்திற்கு கொண்டு வருவதிலும் பெரிய கலையே இருக்கிறது.
Samayam Tamil சென்னையில் சுற்றி சுழன்று பறந்த பீட்சா மாவு- பார்வையாளர்கள் உற்சாகம்


சில ஆண்டுகளுக்கு முன் பீட்சா சாப்பிடுவது எளிதாக இல்லை. ஆனால் இப்போது நிலைமையே வேறு. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பெருநகரங்களில் பல இடங்களில் பீட்சாவுக்கான கடைகள் நிறைய வந்துவிட்டன.

இப்போது பீட்சா சாப்பிடுவதற்கான ஆசை அப்படியே இருந்தாலும், அதை தயாரிப்பதற்கான வழிமுறைகளை அறியும் ஆர்வமும் பலருக்கு வந்துவிட்டது. அதற்குரிய மாவை வாங்கவும், மைக்ரோ ஓவனை வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


இதை ஊக்குவிக்கும் வகையில், சென்னையில் பிரபல வணிகவளாகமான பீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் பீட்சா தயாரிப்பதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பீட்சாவின் தாய்நாடான இத்தாலியில் இருந்து பிரபல சமையலர் பாஸ்குவாலினோ பர்போசோ வந்து தனது விந்தை நிறைந்த வித்தைகள் மூலம் பீட்சா தயாரிக்கும் பக்குவத்தை செய்து காட்டினார்.

பீட்சா தயாரிப்பதற்காக உலகளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட சமையலர் பர்போசா, தொடர்து சாம்பியன்ஷிப் பட்டங்களை வாங்கி குவித்துள்ளார். பீட்சாவின் அளவு 2 விட்டமாக இருந்தாலும், அதை தயாரிக்கும் முறை தான் வாடிக்கையாளர்களிடம் சென்றடைவதாக பர்போசா நிகழ்ச்சியில் பேசினார்.

அடுத்த செய்தி