ஆப்நகரம்

50 சதவீத மாணவர்களுக்கு அனுமதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

அடுத்த கட்ட ஊரடங்கில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Samayam Tamil 17 Jul 2021, 6:53 am
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள ஊரடங்கு ஜூலை 19ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும். இந்நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
Samayam Tamil tn iti students


அந்த வகையில் 19ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரைக்கான காலத்தில் புதிய தளர்வுகள் அமல்படுத்தப்படுகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பள்ளிகளைத் திறக்கும் அளவுக்கு நிலைமை சீராகவில்லை என்கிறார்கள். புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த முடிவு மாற்றிக் கொள்ளப்பட்டது. மேலும் அங்கு குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் தமிழ்நாடு அரசு!
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பிற்கான தடையை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. அதே சமயம் தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் (ITIs and Industrial Schools), தட்டச்சு-சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜெ.நினைவிடம் கிளம்பிய சசிகலா: இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கா மேடம்?
தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு அனுமதியளித்திருக்கும் நிலையில் மாத இறுதிக்குள் மேலும் கொரோனா குறைந்தால் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பிற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

அடுத்த செய்தி