தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இனியும் இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திடீரென்று மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றார். அங்கு தனது கணவர் மாதவனுடன் மலர் வளையம் வைத்து ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இனியும் இந்த ஆட்சி நடைபெற கூடாது என்றும் கூறினார். மேலும், அதிமுகவை காக்க வேண்டும் என்பதே லட்சியம் என்ற அவர் அதிமுகவில் வலிமையான தலைவர்கள் இல்லை என்பதால் பாஜக இயக்குவது போல தோற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திடீரென்று மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றார். அங்கு தனது கணவர் மாதவனுடன் மலர் வளையம் வைத்து ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இனியும் இந்த ஆட்சி நடைபெற கூடாது என்றும் கூறினார். மேலும், அதிமுகவை காக்க வேண்டும் என்பதே லட்சியம் என்ற அவர் அதிமுகவில் வலிமையான தலைவர்கள் இல்லை என்பதால் பாஜக இயக்குவது போல தோற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.