ஆப்நகரம்

சுப்ரமணிய சுவாமி கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து; தமிழிசை எஸ்கேப்

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்றும் கடல்நீரை குடிநீராக்கும் முறையை பயன்படுத்துமாறும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தமிழிசை கூறியுள்ளார்.

Samayam Tamil 4 Feb 2018, 12:29 pm
தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்றும் கடல்நீரை குடிநீராக்கும் முறையை பயன்படுத்துமாறும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தமிழிசை கூறியுள்ளார்.
Samayam Tamil its subramanian swami personal opinion says tamilisai
சுப்ரமணிய சுவாமி கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து; தமிழிசை எஸ்கேப்


பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் கிடைக்காது என்றும் கடல் நீரை குடிநீராக்கும் வழிமுறை பயன்படுத்துமாறும் கூறினார்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டி பழனிசாமி, பன்னீர்செல்வம் தன்னிடம் வந்தால், அதற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

மேலும், தமிழக எம்.பிக்கள் மத்திய அரசிடம் நிதி கேட்க வருவது ஆடு மாடு போல் இருப்பதாக மறைமுகமாக சாடினார்.

முன்னதாக, கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு நீர் கிடைக்க ஜெயலலிதாவின் வழியில் மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது குறித்து முதல்வர் பழனிசாமியின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி வர் விவகாரத்தில் சுப்ரமணிய சுவாமி கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் கட்சியின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி