ஆப்நகரம்

மீம்ஸ் போடும் அளவு வளா்ந்துள்ளேன் – தமிழிசை

இளைஞா்கள் மீம்ஸ் போடும் அளவுக்கு நான் வளா்ந்துள்ளேன் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தர ராஜன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 11 Mar 2018, 5:29 pm
இளைஞா்கள் மீம்ஸ் போடும் அளவுக்கு நான் வளா்ந்துள்ளேன் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தர ராஜன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil ive grown up in measuring said tamilisai
மீம்ஸ் போடும் அளவு வளா்ந்துள்ளேன் – தமிழிசை


தமிழக இளைஞா்கள் சமீப காலமாக அரசியல் தலைவா்கள், சினிமா நடிகா்கள் என பலரையும் மீம்ஸ் மூலமாக கடுமையாக விமா்சித்து வருகின்றனா். குறிப்பாக பா.ஜ.க. மாநில தலைவா் தமிழிசை சௌந்தர ராஜன் தொடா்பான மீம்ஸ்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளா்களிடம் கூறுகையில், இளைஞா்கள் மீம்ஸ் போடும் அளவுக்கு நான் வளா்ந்துள்ளேன். கோடி கோடியாக சுருட்டிக் கொண்டவா்களை கூட விட்டு விடுகின்றனா். ஆனால் என்னை விடுவதாக தொியவில்லை. சுருட்டை முடியை நன்றாக சீவி வருகின்றேன். ஆனாலும் வடிவேலுவுடன் சோ்த்து மீம்ஸ் போடுகின்றனா் என்று தொிவித்தாா்.

அடுத்த செய்தி