ஆப்நகரம்

ஓபிஎஸ் வீட்டில் தீபா; ஆரத்தி எடுத்து வரவேற்பு!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்த ஜெயலலிதாவின் மருமகள் தீபாவுக்கு, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

TNN 14 Feb 2017, 10:44 pm
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்த ஜெயலலிதாவின் மருமகள் தீபாவுக்கு, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
Samayam Tamil j deepa at ops residence
ஓபிஎஸ் வீட்டில் தீபா; ஆரத்தி எடுத்து வரவேற்பு!


சசிகலா சிறைக்குச் செல்ல உள்ள நிலையில், ஜெ. தீபா மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் கரம் கோர்த்துச் செயல்பட தொடங்கியுள்ளனர். முன்னதாக, 2 பேரும் ஒரே காரில் மெரினா கடற்கரைக்குச் சென்று, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு, அங்கிருந்து புறப்பட்ட இருவரும் ஓபிஎஸ் வீட்டிக்குச் சென்றனர். அப்போது, தீபாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் அங்கே நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். ஒருவேளை, 2 பேரும் இணைந்து, ஆளுநரை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், சசிகலா இல்லாவிட்டாலும், எடப்பாடி கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் அதிமுக., தொடர்ந்து நிர்வகிக்க உள்ளனர். இதனால், ஓபிஎஸ் அணி அடுத்தப்படியாக என்ன செய்வது என்ற சிக்கல் எழுந்துள்ளது.

இதன்பேரிலேயே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அழைத்து வந்து, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆனால், இது எந்தளவுக்கு பலன் அளிக்கும் எனப் போகப் போகவே தெரியும்.

J Deepa at OPS residence.

அடுத்த செய்தி