ஆப்நகரம்

நடுத்தெருவுக்கு வந்த ஜெ.தீபா; வரிந்து கட்டி கொண்டு மாதவன், ராஜா உடன் கடும் வாக்குவாதம்!

தீபா, மாதவன், ராஜா இடையேயான சண்டை நடுத்தெருவுக்கு வந்ததால், ஊரே வேடிக்கை பார்த்துள்ளது.

Samayam Tamil 19 Sep 2018, 2:51 pm
சென்னை: தீபா, மாதவன், ராஜா இடையேயான சண்டை நடுத்தெருவுக்கு வந்ததால், ஊரே வேடிக்கை பார்த்துள்ளது.
Samayam Tamil Deepa


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், ’எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யைத் தொடங்கியவர் ஜெ.தீபா. இவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஆவார். பேரவையில் உறுப்பினர் சேர்க்கைக்கு பணம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த பின், பல இடங்களில் பேரவை கலைக்கப்பட்டது. இதற்கிடையில் கட்சியில் ராஜாவிற்கு அளித்த முக்கியத்துவம் காரணமாக, மாதவன் அதிருப்தி அடைந்தார்.

இதையடுத்து அவர் ’எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கடந்த ஆண்டு போயஸ் கார்டனில் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து, ராஜாவை பேரவையில் இருந்து தீபா நீக்கினார்.

ஆனால் மீண்டும் புதிய பதவி அளித்து, பேரவையில் சேர்த்துக் கொண்டார். இந்நிலையில் மூவருக்கும் இடையில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள சிவஞானம் தெருவில் உள்ள ஜெ.தீபா வீட்டிற்கு வெளியே தீபா, மாதவன், ராஜா கடுமையாக சண்டையிட்டுக் கொண்டனர்.

இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் குடும்பத்தில், இப்படி ஒரு நபரா என்று முகம் சுழித்துக் கொண்டனர்.

J Deepa, Madhavan, A V Raja fights for party in the road.

அடுத்த செய்தி