ஆப்நகரம்

1 மணிநேரத்தில் பணியிலிருந்து நீக்க முடியும்: ஜாக்டோ ஜியோ அமைப்பிற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை 1 மணிநேரத்தில் பணியிலிருந்து நீக்க முடியும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

TNN 15 Sep 2017, 11:57 am
மதுரை: தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை 1 மணிநேரத்தில் பணியிலிருந்து நீக்க முடியும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
Samayam Tamil jacto jiya protesters will be dismissed from their job within an hour madras highcourts madurai bench warns government employees
1 மணிநேரத்தில் பணியிலிருந்து நீக்க முடியும்: ஜாக்டோ ஜியோ அமைப்பிற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை 1 மணிநேரத்தில் பணியிலிருந்து நீக்க முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டத்தை வாபஸ் பெறும் பட்சத்தில் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

Jacto-Jiya protesters will be dismissed from their job within an hour Madras highcourt’s Madurai bench warns Government Employees

அடுத்த செய்தி