ஆப்நகரம்

டேம் கட்டியாச்சு எப்படி விவசாயம் நடக்கும்: கேள்வி எழுப்பும் ஜக்கி வாசுதேவ்!

கடந்த 12 வருடங்களில் காவேரி படுக்கையில் 47 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Sep 2019, 2:46 pm
காவிரி நதிக்குப் புத்துயிர் அளிக்கப் போவதாகக்கூறி கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் காவிரி நதிக்கு புத்துயிர் அளிக்க போவதாகக் கூறி கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ’காவிரிக் கூக்குரல்’ என்ற இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்துக்கு ஆதரவு திரட்டுவதுக்காகக் காவிரியை ஓட்டியுள்ள கிராமங்களுக்கு ஜக்கி தனது இருசக்கர வாகனத்தில் செல்ல திட்டமிட்டு, காவிரி தோன்றும் இடமான கர்நாடக மாநிலம், குடகு மலைப் பகுதியில் இருந்து கடந்த 3ஆம் தேதி பயணத்தைத் தொடங்கினார்.
Samayam Tamil jakk


அங்கிருந்து மைசூர், பெங்களூர் சென்றுவிட்டு இன்று காலை தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான ஓசூர் அத்திபள்ளிக்கு வந்தடைந்தார். அந்த வழியே சொகுசு பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த ஜக்கி அனைவரையும் பார்த்து கையை மட்டும் அசைத்துவிட்டு சென்றார். ஜக்கியை பின்தொடர்ந்து பலர் பைக்குகளில் சென்றனர். அதில் சிலர் வீடியோ கேமராக்களை கொண்டு படம் பிடித்துக் கொண்டே சென்றனர்.

அதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் அந்தியூரில், ஜக்கி தனியார் நியூஸ் சேணலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விவசாயிகளுக்குள் நான் முன்னெடுத்துள்ள மரவிவசாயம் குறித்து நல்ல வரவேற்பு இருக்கிறது. எனது இந்த முயற்சிக்கு அரசும் ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளது. இதனால் எனது முயற்சி நிச்சயம் நடக்கும். இப்போது நம்மிடம் உள்ள சவால் ஒன்றுதான். நம்மிடம் இருக்கும் 242 கோடி மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க வேண்டும் என்பதே. இதில் தெற்கு இந்தியாவில் மட்டும் தோராயமாக 6.50 கோடி மரக்கன்றுகள் நடலாம்.

தமிழகத்தில் சுமார் 5 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என நம்புகிறேன். விரைவில் 25 கோடி மரக்கன்றுகளை நாம் நட்டுவிட வேண்டும். நான் எடுத்துள்ள இந்த திட்டத்தை விவசாயிகள் செயல்படுத்தத் தொடங்கினாலே போதும், இதில் வரும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அவர்கள் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடர்வார்கள். இதில் நாம் நினைக்கும் இலக்கை அடைந்துவிட்டால் போதும், நிச்சயம் 8ல் இருந்து 12 வருடங்களுக்குள் நாட்டிலே அதிக நீரை வழங்கும் நதியாக மாறிவிடும்.

இப்போது இருக்கும் சூழலில் முதலில் காவிரி படுக்கையில் உள்ள மண்ணில் ஈரம் வேண்டும். ஈரமாக இருப்பதுக்கு மண்ணுக்குச் சத்து வேண்டும். மண் சத்து பெறுவது மாட்டுச் சாணம் போன்றவற்றால். ஆனால், இப்போதைய சூழலில் விலங்குக்கு உணவு வழங்குவதே கஷ்டமான விஷயமாக உள்ளது. மரம் வந்தால் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

காவிரி ஆறு கடந்த 6 மாதம் காலமாகக் கடலில் சென்று கலக்கவே இல்லை. வண்டல் மண் வந்தால் மட்டுமே அது டெல்டா பகுதி எனப்படும். அணைகள் கட்டப்பட்டதால் வண்டல் மண் என்பது காவிரி கரையோரங்களுக்கு வருவதே இல்லை. இப்போது விவசாயம் செய்து எந்த பயனுமில்லை. இது சில நாட்களில் எந்த பயனுமில்லாமல் சென்றுவிடும்.

இவ்வாறு அவர் கூறினார். ஜக்கியின் இந்த இயக்கம் குறித்துப் பல விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன. சமூக ஊடகங்களில் பல்வேறு எதிர் கருத்துக்கள் தொடர்ந்து எழுப்பப்படுகிறது.

அடுத்த செய்தி