கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு. இவர் 14 நாட்டு காளை மாடுகளை, எருதுவிடும் விழாவிற்கு தயார்படுத்தி வருகிறார். இவை அனைத்தும் அலிகர் நாட்டு வகை காளை மாடுகள் ஆகும்.
அவற்றில் ஒன்றான மகாராணி, பல ஊர்களில் பரிசுகளையும், பட்டங்களையும் வென்றுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் தவுடு கலந்த தீவனத்தை, தனது 5 காளை மாடுகளுக்கு ரகு வழங்கினார்.
அப்போது உணவு உண்ட மாடுகளில் 4 மாடுகள் நிலை தடுமாறி கீழே விழுந்தன. இதையடுத்து உடனடியாக தீவனம் வைப்பதை நிறுத்திக் கொண்டார். பாதிக்கப்பட்ட மாடுகள் தரையில் துடிதுடிக்க தொடங்கின.
உடனே கால்நடை மருத்துவர் அழைத்து வரப்பட்டார். அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை அளித்தார். இருப்பினும் பலனளிக்காமல் 3 நாட்டு காளை மாடுகள் உயிரிழந்தன.
ஒரு காளை மாட்டுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைப் பார்த்து ரகு மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த தகவல் அறிந்ததும் ஊர்மக்கள் திரண்டனர். அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
இந்த சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த காளை மாடுகளுக்கு ஊர் மக்கள் பூஜை செய்தனர். தொடர்ந்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த மாடுகளின் விலை ரூ.10 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.
அவற்றில் ஒன்றான மகாராணி, பல ஊர்களில் பரிசுகளையும், பட்டங்களையும் வென்றுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் தவுடு கலந்த தீவனத்தை, தனது 5 காளை மாடுகளுக்கு ரகு வழங்கினார்.
அப்போது உணவு உண்ட மாடுகளில் 4 மாடுகள் நிலை தடுமாறி கீழே விழுந்தன. இதையடுத்து உடனடியாக தீவனம் வைப்பதை நிறுத்திக் கொண்டார். பாதிக்கப்பட்ட மாடுகள் தரையில் துடிதுடிக்க தொடங்கின.
உடனே கால்நடை மருத்துவர் அழைத்து வரப்பட்டார். அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை அளித்தார். இருப்பினும் பலனளிக்காமல் 3 நாட்டு காளை மாடுகள் உயிரிழந்தன.
ஒரு காளை மாட்டுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைப் பார்த்து ரகு மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த தகவல் அறிந்ததும் ஊர்மக்கள் திரண்டனர். அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
இந்த சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த காளை மாடுகளுக்கு ஊர் மக்கள் பூஜை செய்தனர். தொடர்ந்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த மாடுகளின் விலை ரூ.10 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.