ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கும் ஆப்பு காத்திருக்கு

ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்ய தமிழக அரசு கொண்டுவர இருக்கும் அவசரச் சட்டத்தையும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்க்க தயாராகி வருகின்றன.

TNN 20 Jan 2017, 6:12 pm
ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்ய தமிழக அரசு கொண்டுவர இருக்கும் அவசரச் சட்டத்தையும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்க்க தயாராகி வருகின்றன.
Samayam Tamil jallikattu ordinance peta awbi keeping track of developments
ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கும் ஆப்பு காத்திருக்கு


ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. நேற்று, போராட்டக்காரர்களின் கோரிக்கையின் எதிரொலியாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இச்சந்திப்பில் திருப்திகரமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இதனால், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசரச்சட்டத்தை இயற்றவுள்ளதாக அறிவிக்கத்தத்தது. தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், அவசரச்சட்ட வரைவு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவசரச்சட்டம் தொடர்பான ஒவ்வொரு நகர்வையும் பீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இதுபற்றிக் கூறிய விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், தமிழக அரசு பிறப்பிக்க இருக்கம் அவசரச்சட்டம் பற்றி கவனித்து வருவதாகவும் தக்க நேரத்தில் அனைத்து அதிகாரிகள் கூட்டம் நடத்தி அவசரச்சட்டத்திற்கு சவால் விடுவோம் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி பீட்டா இந்தியா அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்களது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அவசரச்சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை பற்றி முடிவுசெய்வோம் என்றும் இப்போதைக்கு எந்த நிலைப்பாடு எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி