ஆப்நகரம்

ஜல்லிக்கட்டுக்காக மதுரையை அதிர வைத்த மாணவர் பட்டாளம் #We_DO_Jallikattu

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை கல்லூரி மாணவர்கள் இன்று மதுரையில் பேரணி நடத்தினார்கள். இந்த பேரணியில் பல்லாயிரக்கணகானோர் கலந்து கொண்டனர்.

TNN 10 Jan 2017, 1:45 pm
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை கல்லூரி மாணவர்கள் இன்று மதுரையில் பேரணி நடத்தினார்கள். இந்த பேரணியில் பல்லாயிரக்கணகானோர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil jallikattu protest in madurai
ஜல்லிக்கட்டுக்காக மதுரையை அதிர வைத்த மாணவர் பட்டாளம் #We_DO_Jallikattu


பொங்கல் பண்டிக்கை இன்னும் சில நாட்கள் வர இருக்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. இந்தநிலையில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் . இல்லையென்றால் நாங்களே ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று தமிழக முழுவதும் மாணவர்கள் , இளைஞர்கள் போராட்டதில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மதுரை பேரணி நடத்தினார். இந்த பேரணியானது ஜெய்ஹிந்த் புரத்தில் இருந்து சுப்பரமணிய புரம் வரை நடைப்பெற்றது. இந்த பேரணியில் மதுரையைச் சேந்ந்த பல்வேறு கல்லூரிகளை சார்ந்த பல்லாயிர கணக்கான மாணவர்கள் , இளைஞர், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல காரைக்குடி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டகளத்தில் இறங்கியுள்ளனர். மேலும் இன்று மாலை நெல்லை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி