சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி முழுவதுமாக மாணவர்களுக்கே உரித்தானது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ஆர்.பி.கே திருமண மண்டபத்தில் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி, மாணவர்களுக்கே உரித்தானது. அதனை நாம் ஒருபோதும் மறைந்துவிடக் கூடாது.
அத்தகைய இளைஞர் சக்தியை வீணாக்காமல் திறம்பட பயன்படுத்த வேண்டும். அரசியல், பொருளாதார நிலையில் அனைத்தையும் சரி செய்ய மாணவர்கள் நினைத்தால் முடியும். இனம், மொழியை காக்க அவர்கள் முன் வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
Jallikattu protest is the victory of Students Says MK Stalin.
திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ஆர்.பி.கே திருமண மண்டபத்தில் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி, மாணவர்களுக்கே உரித்தானது. அதனை நாம் ஒருபோதும் மறைந்துவிடக் கூடாது.
அத்தகைய இளைஞர் சக்தியை வீணாக்காமல் திறம்பட பயன்படுத்த வேண்டும். அரசியல், பொருளாதார நிலையில் அனைத்தையும் சரி செய்ய மாணவர்கள் நினைத்தால் முடியும். இனம், மொழியை காக்க அவர்கள் முன் வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
Jallikattu protest is the victory of Students Says MK Stalin.