ஆப்நகரம்

பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூடுகிறது!

பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூடுகிறது!

TOI Contributor 20 Jan 2017, 11:21 am
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வலுத்துள்ள பரபரப்பான இந்த சூழலில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூடுகிறது.
Samayam Tamil jallikattu protest tamilnadu ministers meeting going to happen today evening
பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூடுகிறது!


தமிழகம் முழுவதும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும், ஜல்லிக்கட்டு நடத்த நிரந்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றப்படும் என்றும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் வாடிவாசல் திறக்காமல், வீடு வாசல் செல்வதில்லை என்றும் மாணவர்கள் கூறிவிட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று மாலை தமிழக அமைச்சரவைக்கூட்டம் கூடுகிறது. பரபரப்பான சூழலில் கூடுவதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி