ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போராட்டம்:ஜியோவுக்கு நன்றி சொன்ன இளைஞர்கள்..!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களை ஒன்றிணைக்க ஜியோ நிறுவனத்தின் இலவச சலுகைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக இளைஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

TNN 19 Jan 2017, 11:52 pm
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களை ஒன்றிணைக்க ஜியோ நிறுவனத்தின் இலவச சலுகைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக இளைஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil jallikattu ptotesters thanked jio for its free data schemes
ஜல்லிக்கட்டு போராட்டம்:ஜியோவுக்கு நன்றி சொன்ன இளைஞர்கள்..!


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி,தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள்,ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும்,பீட்டா,மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் போராட்டத்தில்,ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து சிலர் பதாகைகளை ஏந்தி நின்றதை பார்க்க முடிந்தது.”டேட்டா தீர்ந்தாலும்,பீட்டாவை விட மாட்டோம்;ஜியோ நிறுவனத்திற்கு நன்றி..!” என அந்த பதாகைகளில் எழுதியிருந்தனர்.மேலும் அதனை கோஷமாகவும் சொல்லினர்.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுக சலுகையாக அன்லிமிடெட் 4ஜி இணைய வசதி மற்றும் அன்லிமிடெட் கால் வசதியை அளித்திருந்தது.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இந்த போராட்டத்தில் மாணவர்களையும்,மக்களையும் சமூக வலைத்தளங்கள் வழியாக ஒன்றிணைக்க,ஜியோ நிறுவனத்தின் இலவச சலுகைகள் மிகவும் உதவியதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததாக அந்த இளைஞர் விளக்கமளித்தனர்.

Jallikattu ptotesters thanked Jio for its free data schemes

அடுத்த செய்தி