ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போராட்டக்களம் வரவேற்காத ஸ்டாலினுக்கு நெடுவாசல் உற்சாக வரவேற்பு!!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தின்போது அங்கு சென்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை போராட்டக்காரர்கள் வரவேற்கவில்லை, ஆனால், இன்று ஹைட்ரோ கார்பன் போராட்டக்காரர்கள் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

TOI Contributor 3 Mar 2017, 12:34 pm
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தின்போது அங்கு சென்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை போராட்டக்காரர்கள் வரவேற்கவில்லை, ஆனால், இன்று ஹைட்ரோ கார்பன் போராட்டக்காரர்கள் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Samayam Tamil jallikattu said no to mkstalin hydro carbon welcomed him
ஜல்லிக்கட்டு போராட்டக்களம் வரவேற்காத ஸ்டாலினுக்கு நெடுவாசல் உற்சாக வரவேற்பு!!


கடந்த ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. போராட்டக்களத்திற்கு மாணவர்களை வாழ்த்த வந்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை மட்டுமின்றி எந்த அரசியல் தலைவர்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 16வது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இன்று நெடுவாசலுக்கு சென்று இருந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். போராட்டக்காரர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து இருந்த ஸ்டாலின் பின்னர் அவர்களிடையே பேசினார். அப்போது, இந்த திட்டத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார். மேலும், '' நியாயமாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு விரைவில் முடிவு காண வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டமாக இருக்கட்டும், ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டமாக இருக்கட்டும், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி இந்த திட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரவேண்டும்'' என்று தெரிவித்தார். இந்தப் போராட்டத்திலும் முழுக்க முழுக்க கிராம மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திட்டத்திற்கு மாநில அரசு வழங்க வேண்டிய சுற்றுச்சூழல் சான்றிதழ் மற்றும் வர்த்தக ரீதியிலான அனுமதியை வழங்காது என்று முதல்வர் எடப்பட்டி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார். இருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து உறுதியான எந்த முடிவும் தெரியாமல், இந்தப் போராட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

jallikattu said no to mkstalin; hydro carbon welcomed him!!

அடுத்த செய்தி