ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ் உறுதி

ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் விரும்பம் தெரிவித்துள்ளார்.

TNN 19 Jan 2017, 8:22 pm
ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் விரும்பம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jallikattu should happen says jaggi vasudev
ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ் உறுதி


ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. போராட்டக்காரர்களின் கோரிக்கையின் எதிரொலியாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அதற்கு பிரதமர் அளித்த பதிலில் திருப்தி அளிக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அத்துடன், கிரிக்கெட் விளையாட்டிலும் ஆபத்து இருக்கிறது. அதற்காக கிரிக்கெட்டை தடைசெய்யப்போகிறார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி