ஆப்நகரம்

சேலம்: அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில், மாடு முட்டி ஒருவர் பலி

சேலத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு முட்டி சூர்யா என்ற பார்வையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Jan 2018, 10:59 pm
சேலத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு முட்டி சூர்யா என்ற பார்வையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil jallikattu spectator gored to death by bull near salem
சேலம்: அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில், மாடு முட்டி ஒருவர் பலி


சேலம் மாவட்டம் ஆத்தூர் தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டியில், நேற்று அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை காண திருச்சி மாவட்டம் நாகநல்லூரைச் சேர்ந்த சூர்யா என்பவர் பார்வையாளர் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரதவிதமாக பார்வையாளர்கள் கூட்டத்துக்கு வந்த மாடு, சூர்யாவை முட்டி தூக்கி எறிந்தது. இதில், வயிறு கிழிந்து குடல் வெளியே வந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சூர்யா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், மாடுகள் முட்டியதில் 4 பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டி குறித்து தகவல் அறிந்த போலீசார், மைதானதுக்கு சென்றனர். ஆனால், போலீசாரின் வருகையை அறிந்த ஜல்லிக்கட்டு மக்கள், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறியதால், போட்டி நடத்தியவர்களை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி