ஆப்நகரம்

2 ஆண்டுகளுக்குப் பின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது; மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியுள்ளது.

TOI Contributor 5 Feb 2017, 8:37 am
2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியுள்ளது.
Samayam Tamil jallikattu starts in madurai avaniapuram hundreds of youths participating
2 ஆண்டுகளுக்குப் பின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது; மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!


காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ் உள்பட அரசு அதிகாரிகளும், உள்ளூர் பிரமுகர்களும் இதனை பார்வையிட்டு வருகின்றனர்.

போட்டியை ஒட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கூடி, ஜல்லிக்கட்டை பார்த்து, ரசிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இருந்து போட்டியில் பங்கேற்க வந்துள்ள காளைகளை அடக்குவதற்காக, ஏராளமான மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர். போட்டி தொடங்கும் முன்பாக, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மேலும், விதிகளை மீறி, காளைகளை அடக்கும் விதமான செயல்களை மேற்கொள்ளும் மாடுபிடி வீரர்கள், உடனடியாக, போட்டியிடத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். விதிமுறைகளின்படியே ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதாக, விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Jallikattu starts in Madurai Avaniapuram; hundreds of youths participating

அடுத்த செய்தி