ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு தன்னார்வலர்கள் முதல்வருடன் சந்திப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள் முதல்வர் பன்னீர்செல்வத்தை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தனர்.

TNN 28 Jan 2017, 3:41 pm
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள் முதல்வர் பன்னீர்செல்வத்தை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தனர்.
Samayam Tamil jallikattu volunteers met tn cm in secretariat
ஜல்லிக்கட்டு தன்னார்வலர்கள் முதல்வருடன் சந்திப்பு


ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் சுமார் ஒரு வார காலமாக அறவழியில் போராடி வந்தனர். மாணவர்களின் எழுச்சி போராட்டத்தையடுத்து, தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. ஆனால், நிரந்தர சட்டம் வேண்டும் என கோரி, மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தும் பொருட்டு அவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், கூட்டத்தை கலைத்தனர். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள் முதல்வர் பன்னீர்செல்வத்தை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தனர். அப்போது, சென்னை மெரினா கடற்கரையில் தமிழர் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டை நினைவுப்படுத்தும் விதமாக காளை நினைவு சின்னம் அமைக்கப்பட வேண்டும். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடைசி நாள் நடந்த வன்முறையில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி மாணவர்கள் இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினர். அத்துடன், இது தொடர்பான கோரிக்கை மனுவினையும் முதல்வரிடம் அவர்கள் அளித்துள்ளனர்.
Jallikattu Volunteers met TN CM in secretariat

அடுத்த செய்தி