ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு யுத்தம் : கோவையில் தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள்

ஜல்லிக்கட்டு போட்டியை உடனடியாக நடத்த வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று கூறி கோவையில் இளைஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

TNN 17 Jan 2017, 5:19 pm
கோவை: ஜல்லிக்கட்டு போட்டியை உடனடியாக நடத்த வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று கூறி கோவையில் இளைஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Samayam Tamil jallikattu war kovai youth protest for jallikkattu
ஜல்லிக்கட்டு யுத்தம் : கோவையில் தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள்


உச்ச நீதிமன்றத்தின் தடையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தமுடியவில்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று போராட்டம் நடைப்பெற்று வருகின்றது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள் சமூகவலைதளம் மூலமாக தன்னெழுச்சியாக இணைந்து போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் , "ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த வேண்டும். பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதே போல கடந்த 12-ம் தேதி ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்தவேண்டும் என்று கூறி கோவை கொடிசியா மைதானத்தில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக கூடியது குறிப்பிடத்தக்கது.மேலும் இன்று கோவையில் நடிகர் சூர்யா மாணவர்கள் மத்தியில் பேசும் போது, " தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு எதிராக என்றும் இதேபோல் ஒன்றுக் கூடி குரல் கொடுக்க வேண்டும் என்று சூர்யா கூறியிருந்தார்.

அடுத்த செய்தி