ஆப்நகரம்

ஒருவழியாக ஜல்லிக்கட்டை ஏற்றுக்கொண்ட விலங்குகள் நல ஆணையம்!!

ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் எதுவும் கொடுமைப்படுத்தப்படவில்லையென இந்திய விலங்குகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 19 Jan 2018, 12:51 am
ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் எதுவும் கொடுமைப்படுத்தப்படவில்லையென இந்திய விலங்குகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil jallikkattu awbi says it hasnt received any animal cruelty complaints
ஒருவழியாக ஜல்லிக்கட்டை ஏற்றுக்கொண்ட விலங்குகள் நல ஆணையம்!!


இது குறித்து பேசிய இந்திய விலங்குகள் நல ஆணையத்தின் தலைவர் குப்தா,”ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் கொடுமைப்படுத்தப்படுகிறதா என்பதை அறிய, விலங்குகள் நல ஆணையம் சார்பாக கண்காணிப்பாளர்கள் ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டனர்.

ஆனால், இதுவரையில் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கொடுமை இழைக்கப்பட்டதாக எந்தப் புகார்களும் தெரிவிக்கப்படவில்லை”, என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி