ஆப்நகரம்

100 கோடி முதலீட்டில் கோயம்புத்தூரில் ஜப்பான் கம்பெனி..!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல ஹிரோடெக் குழுமம் கோயம்புத்தூரில் ஆட்டோமொபைல் தொழிற்சாலையை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Jan 2020, 7:42 pm
ஜப்பான், இந்தியாவும் தொழில் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் நல்லுறவு பாராட்டி வருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு வரை ஜப்பான் தமிழகத்தில் 192 நிறுவனங்களை தொடங்கியுள்ளது.
Samayam Tamil 100 கோடி முதலீட்டில் கோயம்புத்தூரில் ஜப்பான் கம்பெனி


இந்த நிலையில் கோயம்புத்தூர் கீரநத்தம் பகுதியில் ஜப்பானின் ஹிரோடெக் குழுமம் ஆட்டோமொபைல் அசெம்பிளி தொழிற்சாலையுடன் கூடிய வெல்டிங், ஹெம்மிங் மற்றும் ஸ்டாம்பிங் சாயங்கள் தயாரிப்பு உள்ளிட்ட வசதிகளை கொண்ட பல்முனை தொழிற்சாலையை தொடங்கவுள்ளது.

இதற்காக 100 கோடியை ஒதுக்கியுள்ள அக்குழுமம் 65 கோடியை சாதனங்களை வாங்கவும், 35 கோடியை தொழிற்சாலை கட்டமைப்புக்கும் செலவிடுவதாக கூறியுள்ளது.

ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

இதுகுறித்து ஹிரோடெக் குழுமம் கூறுகையில் ' அடுத்த 10 ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும் உள்ள கார் உற்பத்தியாளர்களின் முத்திரை சாயங்கள் தேவையை பூர்த்தி செய்யப்படவுள்ளோம்.

இதற்காக 140 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதனால் 7,400 சதுர மீட்டர் பரப்பளவில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு 150 பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஹிரோடெக் குழுமம் “இந்தியாவில் தொடர்ச்சியான முதலீடுகளுக்கான திட்டங்களைக் கொண்டு வரவுள்ளது.

காணும் பொங்கல் கோலாகலம்: கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

2025 ஆம் ஆண்டிற்குள் சாய உற்பத்தியில் 100 சதவீத உற்பத்தித் திறனை அடைவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி