ஆப்நகரம்

விஜயகாந்த் மௌனம்: பாஜக ஏமாற்றம்?

எதிர்பார்த்த கூட்டணி அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் இன்று விஜயகாந்த்-ஜவேடகர் சந்திப்பு முடிவடைந்தது

TNN 28 Feb 2016, 4:58 pm
சென்னை: எதிர்பார்த்த கூட்டணி அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் இன்று விஜயகாந்த்-ஜவேடகர் சந்திப்பு முடிவடைந்தது.
Samayam Tamil javdekar meets vijayakanth but no major announcment
விஜயகாந்த் மௌனம்: பாஜக ஏமாற்றம்?


கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜக தமிழக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவேடகர் இன்று பகல் 3 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது சாலிக்கிராமம் இல்லத்தில் சந்தித்து பேசினார். அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் உடனிருந்தார்.

இன்றைய சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவேடகர், "விஜயகாந்துடன் இன்று நடந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. மீண்டும் அடுத்த வாரத்தில் அவரை சந்திக்கவுள்ளோம். கடந்த 24 மணி நேரத்தில் பல கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.


நாங்கள் தேமுதிக தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மேலிடத்தில் தெரிவிக்கப்படும்.
நரேந்திர மோடி அரசு போல தமிழகத்துக்கும் சிறந்த நிர்வாக திறனுள்ள அரசு இன்றியமையாததாகும். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மோடி அரசு செய்து வருகிறது.

வரும் மார்ச் 12-ஆம் தேதியில் அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் மீண்டும் சந்திக்கவுள்ளோம்" என்று கூறினார்.

இன்று கூட்டணி முடிவடைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், விஜயகாந்த்தின் மௌனம் தொடர்வதால், பாஜக ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி