ஆப்நகரம்

திருவண்ணாமலை ஆட்சியர் உதவியால் பல் மருத்துவராகும் ஏழை விவசாயி மகள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் பலரது உதவியால் மருத்துவம் படிக்க நினைத்த ஒரு ஏழை மாணவியின் கனவு சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Jul 2018, 11:24 am
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் பலரது உதவியால் மருத்துவம் படிக்க நினைத்த ஒரு ஏழை மாணவியின் கனவு சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil jawadhu-hills-doctor
பல் மருத்துவராகும் ஜவ்வாது மலை விவசாயி மகள்..!!


ஜவ்வாது மலையில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் சுமித்ரா. வறுமையான நிலையிலும் பள்ளி படிப்பை வெற்றிக்கரமாக முடித்த அவர் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டார்.

இவரை பற்றி செய்தி ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி கவனத்திற்கு வந்தது.

மாணவியின் நிலை அறிந்து ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி பலரிடம் உதவி கோரினார். அதன் மூலம் தற்போது மாணவி சுமித்ராவின் மருத்து படிப்பிற்கு ரூ. 10 லட்சம் வரை உதவி கிடைத்துள்ளது.

தொடர்ந்து அவரது மருத்துவ படிப்பிற்கான மீதமுள்ள கட்டணங்கள் கல்வித் உதவித்தொகையின் மூலம் செலுத்தப்படும் என ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி உறுதி அளித்துள்ளார்.

நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி சுமித்ரா 973 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மேலும் 2018 நீட் தேர்வில் 135 மதிப்பெண்கள் பெற்றார். தற்போது கடலூர் தனியார் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க மேலாண்மை ஒதுக்கீடு மூலம் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

மகளின் மருத்துவ கனவு சாத்தியமாக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தந்தை மாணிக்கம், ஆட்சியர் கே.எஸ். கந்தசாமிக்கு தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய மாணவி சுமித்ரா, வெற்றிகரமாக மருத்துவம் படிப்பு முடித்து தனது ஜவ்வாது மலை கிராமத்து மக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

அடுத்த செய்தி