ஆப்நகரம்

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு: முதல்வர் ஜெ., இரங்கல்

அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவிற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

TNN 14 Nov 2016, 6:22 pm
சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவிற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jaya condolence for visalatchi neduncheliyan
விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு: முதல்வர் ஜெ., இரங்கல்


அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான விசாலாட்சி நெடுஞ்செழியன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. அதிமுக அமைப்பு செயலாளராகவும், தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவியாகவும் இருந்த விசாலாட்சி, மறைந்த அதிமுக மூத்த தலைவர் நெடுஞ்செழியனின் மனைவி ஆவார்.

கடந்த 15 நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விசாலாட்சி நெடுஞ்செழியன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இந்நிலையில், விசாலாட்சியின் மறைவிற்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அக்கட்சியின் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். விசாலாட்சியின் மறைவு அதிமுக-வுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று முதல்வர் ஜெயலலிதா, தான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவைத் தோற்றுவித்த தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியனின் மனைவியான விசாலாட்சி, தனது கணவர் நெடுஞ்செழியன் அதிமுக-வில் ஐக்கியமான போது, அவருடன் சேர்ந்து அதிமுகவில் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Jaya condolence for Visalatchi neduncheliyan

அடுத்த செய்தி