ஆப்நகரம்

கட் அவுட்களுக்கு குட்பை சொன்ன ஜெயலலிதா

தமிழகத்தின் 6வது முறை முதல்வராக இன்று ஜெயலலிதா பங்கேற்பதை முன்னிட்டு வழி நெடுகில் கட் அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 23 May 2016, 12:00 pm
தமிழகத்தின் 6வது முறை முதல்வராக இன்று ஜெயலலிதா பங்கேற்பதை முன்னிட்டு வழி நெடுகில் கட் அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil jaya has put full stop to cut out culture
கட் அவுட்களுக்கு குட்பை சொன்ன ஜெயலலிதா


சாதாரணமாக ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்சியினர் ஆரவாரம், கொண்டாட்டம் என்று எப்போதும் வழி நெடுகிலும் தோரணங்கள், கொடிகள், வானுயர உயர்ந்து நிற்கும் பேனர்கள், கட் அவுட்கள் என்று களை கட்டும்.

ஆனால், இன்று கட்சி கொடிகள் மட்டுமே எங்கும் காட்சியளிக்கிறது. பெரிய பெரிய தோரணங்களுக்கு முடிவு கட்டியுள்ளார்.

வழி நெடுகிலும் அதிமுக தொண்டர்கள் கடும் வெயிலிலும் காத்திருக்க, காரில் மெதுவாக செல்லும் ஜெயலலிதா அவர்களைப் பார்த்து கை அசைத்து செல்கிறார்.

அடுத்த செய்தி