ஆப்நகரம்

பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பு: காணாமல் போன தமிழரை மீட்கக் கோரி பிரதமருக்கு ஜெ., கடிதம்

பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பில் மாயமான தமிழர் ராகவேந்திரன் கணேசனை கண்டுபிடிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்படி, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

TOI Contributor 26 Mar 2016, 10:51 pm
பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பில் மாயமான தமிழர் ராகவேந்திரன் கணேசனை கண்டுபிடிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்படி, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil jaya letters to pmasks to find out the tamilian who missed in brussels blast
பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பு: காணாமல் போன தமிழரை மீட்கக் கோரி பிரதமருக்கு ஜெ., கடிதம்


சமீபத்தில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில், இன்ஃபோசிஸ் ஊழியரும், தமிழருமான ராகவேந்திரன் கணேசன் என்பவர் மாயமானார். அவரைத் தேடும் பணிகளை, இன்ஃபோசிஸ் நிறுவனம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பெல்ஜியம் அரசு ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், ராகவேந்திரன் கணேசனை மீட்கும்படி, பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். வெளியுறவுத்துறை மூலமாக, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

அடுத்த செய்தி