ஆப்நகரம்

ஆறாவது முறையாக தமிழக முதல்வர்: பதவியேற்றார் ஜெ.,

தமிழக முதல்வராக ஆறாவது முறையாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

TNN 23 May 2016, 12:08 pm
சென்னை: தமிழக முதல்வராக ஆறாவது முறையாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
Samayam Tamil jaya sweared in as tn cm
ஆறாவது முறையாக தமிழக முதல்வர்: பதவியேற்றார் ஜெ.,


தமிழக 15-வது சட்டப்பேரவைக்கு நடைபெற்று முடிந்த தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் ஆட்சியை பிடித்து பெரும்பான்மை பெற்றது. அதனையடுத்து, அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்ட ஜெயலலிதா, ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்றார். போயஸ்கார்டன் முதல் விழா அரங்கம் வரை வழி நெடுகிலும் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக ஆளுநர் ரோசையா ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஜெயலலிதாவுடன் இணைந்து அமைச்சர்கள் 28 பேருக்கும் ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில், திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் மோடி ஈரான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால் அவர் சார்பில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், இந்தியை கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி