ஆப்நகரம்

தமிழக மக்களின் தேவதை, தாய் போன்றவர் ஜெயலலிதா: சரோஜா தேவி

தமிழக மக்களின் தேவதை மற்றும் தாய் போன்றவர் ஜெயலலிதா என்று பழம்பெரும் நடிகை சரோஜா தேவி புகழாரம் சூட்டியுள்ளார்.

TNN 6 Dec 2016, 1:26 pm
சென்னை: தமிழக மக்களின் தேவதை மற்றும் தாய் போன்றவர் ஜெயலலிதா என்று பழம்பெரும் நடிகை சரோஜா தேவி புகழாரம் சூட்டியுள்ளார்.
Samayam Tamil jaya was like an angel and mother of tamilnadu says saroja devi
தமிழக மக்களின் தேவதை, தாய் போன்றவர் ஜெயலலிதா: சரோஜா தேவி


கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா பெரிய தெய்வம் என்றும் கூறினார். அவர் தமிழக மக்களுக்கு தாய் என்றும், எப்போதும் தேவதை போன்று காணப்படுவார் என்றும் புகழாரம் சூட்டினார். தன்னிடம் எப்போதும் கன்னடத்தில் மட்டுமே பேசுவார் என்றும், சிறு சிறு வேடங்களில் நடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் கூறினார். எவ்வளவு துயரங்கள் வந்தாலும், அதனை சிரித்த முகத்தோடு எதிர்கொண்டார் என்றும் சரோஜா தேவி தெரிவித்தார்.

Jaya was like an angel and mother of Tamilnadu says saroja devi.

அடுத்த செய்தி