ஆப்நகரம்

எடப்பாடி தலைமையில் பொதுக்குழு: ஜெயக்குமார் அறிவிப்பு!

ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிப்பார் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Samayam Tamil 25 Jun 2022, 11:54 am
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் சி.வி.சண்முகம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
Samayam Tamil Edappadi K Palaniswami


இன்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “சி.வி.சண்முகம் நேற்று 51 நிமிடம் சட்ட விளக்கத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் கொடுத்தார். அதை வைத்திலிங்கம் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்.
எஸ்.பி.வேலுமணி வழக்கு: சிக்கப் போகும் இத்தனை அதிகாரிகள்?
உட்கட்சி விவகாரங்களில் பாஜக உள்ளிட்ட யாரும் தலையீடு செய்ய முடியாது. ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்பார்.

ஓபிஎஸ் ஏன் மன வேதனையில் இருக்கிறார், அதிமுக தொண்டர்கள் தான் மன வேதனையில் இருக்கின்றனர். தேர்தல் ஆணையத்துக்கு செல்வது, நீதிமன்றம் செல்வது என அவர் கலகம் செய்து வருகிறார். ஊரோடு ஒத்து வாழ் என்று சொல்லியிருக்கிறார்களே அதே போல் ஓபிஎஸ்ஸும் ஒத்து வாழ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி