ஆப்நகரம்

ஒற்றைத் தலைமை: இபிஎஸ் என்ன செய்யப் போகிறார்?

எடப்பாடி பழனிசாமியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஜெயக்குமார் பேசியுள்ளார்.

Samayam Tamil 23 Jun 2022, 7:42 am
அதிமுக பொதுக்குழு இன்று நடைபெற உள்ள நிலையில் அதிகாலை முதலே வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் முன்பு தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். மண்டபத்தின் முன் 2500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil Edappadi K Palaniswami


பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழ், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம் தொடர்பாக இன்று அதிகாலை தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், “திமுக பொதுக்குழு கூட்டத்தை நாளை (இன்று) திட்டமிட்டபடி நடத்தலாம்; தீர்மானம் தொடர்பாக எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது. தீர்மானங்களை நிறைவேற்றவோ, புதிய தீர்மானங்களை கொண்டு வரவோ தடையில்லை. பொதுக்குழுவுக்கு தடை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று தெரிவித்திருந்தார்.
அதிமுக பொதுக்குழு: நள்ளிரவில் நடந்த ட்விஸ்ட் - ஓபிஎஸ் கை ஓங்கியது!
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஜெயக்குமார் பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை. உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்” என்று கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வார் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். எக்காரணம் கொண்டும் எடப்பாடி பழனிசாமி பெயர் சொல்லி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என ஓபிஎஸ் தரப்பு தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
EXCLUSIVE: எடப்பாடி ஜெயித்தது எப்படி? ஓபிஎஸ் சறுக்கியது எங்கே? ராஜன் செல்லப்பா பேட்டி!
திருமண மண்டபத்தின் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி