ஆப்நகரம்

முதல்வர் அறிவிப்பு எதிரொலி: போயஸ் இல்லத்தில் போலீசார் குவிப்பு. உச்சக்கட்டத்தில் பதற்றம்!

சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததையடுத்து, போயஸ்கார்டனில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது

TNN 17 Aug 2017, 6:09 pm
சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததையடுத்து, போயஸ்கார்டனில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது
Samayam Tamil jayalaith poes garden house high security
முதல்வர் அறிவிப்பு எதிரொலி: போயஸ் இல்லத்தில் போலீசார் குவிப்பு. உச்சக்கட்டத்தில் பதற்றம்!


மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.



ஜெயலலிதா இறந்த பின் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தை சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றினர். பின்பு, சசிகலா தரப்பில் முதல்வர் ஆக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களாக தினகரன் மற்றும் சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க தொடங்கினார்.

இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றிய வேதா இல்லம் அரசுடமை ஆக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இதனால், போயஸ் கார்டனில் அதிமுகவினரின் கூட்டம் அதிகமாக வரத்துவங்கியுள்ளது.

இருந்த போதிலும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் போயஸ் இல்லத்தில் காவலர்கள் போடப்பட்டுள்ளதால், அந்தப் பகுதிக்குள் யாரையும் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் போயஸ் தோட்டம் சாலையில் பதற்றம் அதிகரித்துள்ளது

அடுத்த செய்தி