ஆப்நகரம்

சோவுக்கு முன்னால் இறக்க விரும்பிய அம்மா!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்று காலமான மூத்த பத்திரிகையாளர் சோவுக்கு முன்பே இறக்க விரும்பியதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

TNN 8 Dec 2016, 12:30 am
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்று காலமான மூத்த பத்திரிகையாளர் சோவுக்கு முன்பே இறக்க விரும்பியதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Samayam Tamil jayalaithaa wanted to die before cho ramaswamy say retird ias officer murugan
சோவுக்கு முன்னால் இறக்க விரும்பிய அம்மா!


அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் காலமானர். இன்று, அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ ராமசாமி அதே அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இருவருக்கும் நாடு முழுவதும் உள்ள பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் சோ ராமசாமி அவர்களுக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய நட்பைப் பற்றி பேசினார்.

அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சோ அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, “நீங்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறீர்கள். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. உங்களுக்கு முன், நான் இறந்துவிட வேண்டும் என்பது தான் அது” என்று குறிப்பிட்டதாக முருகன் தெரிவித்திருக்கிறார்.



“அன்று ஜெயலலிதா அவர்கள் சொன்னதைக் கேட்டபோது எனக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், அது உண்மையிலேயே நடந்திருக்கிறது. சோ அவர்கள் இறந்த செய்தியைக் கேட்டதும் நான் இதை நினைத்துக்கொண்டேன். இது அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது அங்கிருந்த எல்லாருக்கும் தெரியும்” என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் நெகிழ்வுடன் பதிவுசெய்தார்.

அடுத்த செய்தி