ஆப்நகரம்

ஜெயலலிதாவின் பாதுகாவலர் பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன்

ஜெயலலிதாவுக்கு பல வருடங்களாக பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி, வரும் 10ம் தேதி ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 4 Jan 2018, 12:00 pm
ஜெயலலிதாவுக்கு பல வருடங்களாக பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி, வரும் 10ம் தேதி ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
Samayam Tamil jayalalith death inquiry commission sent summon to jayalalithas security
ஜெயலலிதாவின் பாதுகாவலர் பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, சசிகலா, தீபா, மாதவவன், அப்போலோ மருத்துவர்கள் என அனைவரிடத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு பல வருடங்களாக பாதுகாப்பு பணி அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி வரும் 10ம் தேதி விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், 8ம் தேதி ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார், 9ம் தேதி பூங்குன்றன், 2 வது முறையாக 11ம் தேதி டாக்டர் பாலாஜியும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி