ஆப்நகரம்

இரட்டை இலைக்கு லஞ்சம்; ராஜினாமா செய்த ஜெ.,வின் அரசியல் தோஸ்த்

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் ஆலோசகர் ராஜினாமா செய்துள்ளார்.

TNN 19 May 2017, 1:29 pm
சென்னை: இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் ஆலோசகர் ராஜினாமா செய்துள்ளார்.
Samayam Tamil jayalalitha advisor resigns today due to investigation of twin leaves case
இரட்டை இலைக்கு லஞ்சம்; ராஜினாமா செய்த ஜெ.,வின் அரசியல் தோஸ்த்


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலர் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவால் டெல்லி ஆலோசகராக நியமிக்கப்பட்ட பவன் ரெய்னாவின் பெயரும் அடிபட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக பவன் ரெய்னாவிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jayalalitha advisor resigns today due to investigation of Twin Leaves case.

அடுத்த செய்தி