ஆப்நகரம்

ஜெயலலிதா மறைந்த பின்னும் இயங்கி வரும் அவரது வங்கிக் கணக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டுகளுக்கு பின்னும் அவருடைய வங்கிக் கணக்கு தற்போது வரை செயல்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Samayam Tamil 27 Jan 2019, 8:15 pm
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டுகளுக்கு பின்னும் அவருடைய வங்கிக் கணக்கு தற்போது வரை செயல்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
Samayam Tamil தற்போது வரை செயல்பாட்டில் உள்ள ஜெயலலிதா வங்கிக் கணக்கு


சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016, டிசம்பர் 5ம் தேதி காலமானார். அதை தொடர்ந்து அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம், நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்த வருமான வரித்துறை, ஜெயலலிதா போய்ஸ் தோட்ட வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான நான்கு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது எனவும், நிலுவையில் உள்ள ரூ. 16 கோடியை செலுத்தினால் முடக்கப்பட்ட சொத்துக்களை மீட்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் அவருக்கு சொந்தமான வணிகவளாகங்கள், வீட்டு வாடகை மற்றும் கோடநாடு எஸ்டேட் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் பணம் செலுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜெயலலிதா 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, இந்த வருமான வரி நிலைவைத் தொகை குறித்த எந்த தகவல்களையும் தனது வேட்புமனுக்களில் தெரிவில்லை என்பது நினைவுக்கூறத்தக்கது.

அடுத்த செய்தி