ஆப்நகரம்

போயஸ் கார்டனில் இருந்து ராஜாஜி ஹாலிற்கு ஜெயலலிதாவின் உடல் எடுத்துச்செல்லப்படுகிறது

போயஸ் கார்டனில் இருந்து ராஜாஜி ஹாலிற்கு ஜெயலலிதாவின் உடல் எடுத்துச்செல்லப்படுகிறது

TOI Contributor 6 Dec 2016, 5:56 am
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலானது போயஸ்கார்டனில் இறுதிச்சடங்கு முடிந்து பொதுமக்களின் பார்வைக்காக ராஜாஜி ஹாலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது.
Samayam Tamil jayalalitha body in rajaji hall for people tribute
போயஸ் கார்டனில் இருந்து ராஜாஜி ஹாலிற்கு ஜெயலலிதாவின் உடல் எடுத்துச்செல்லப்படுகிறது


தமிழக அரசியலின் சோகமான மற்றும் மறக்க முடியாத நிகழ்வாக, துக்க செய்தியாக முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த செய்தி எல்லோரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் 6வது முறையாக பதவி வகித்து வந்த ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு அடுத்ததாக தொடர்ந்து இரண்டு முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார். மேலும் பதவியில் இருக்கும் போது இறந்த தமிழக முதல்வர்களில் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆருக்கு அடுத்து மூன்றாவதாக பதயின் போதோ இறந்தவர் ஜெயலலிதா தான். கடந்த இரண்டறை மாதங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்ததது.

இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார் என்று அப்போலோ நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்தது. அறிவிப்பு வெளியான தருணத்தில் இருந்து அதிமுக தொண்டர்கள் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் போயஸ் கார்டனுக்கு முதல்வரின் உடல் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. தற்போது ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டுசெல்லப்படுகிறது. முதல்வரின் உடல் மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி