ஆப்நகரம்

தீபா வளர்ச்சியைத் தடுக்க அதிமுக போட்ட திட்டம்!

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ஜெ தீபா, அதிமுக தனக்கு செய்த துரோகம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Samayam Tamil 5 Dec 2019, 8:08 pm
தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்து இன்றோடு 3 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அதிமுக, அமமுக, உள்ளிட்ட கட்சிகள் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த வரிசையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.
Samayam Tamil 3012019blobid1546520184111


இவ்வளவு டன் வெங்காயம் கைவசம் இருந்துமா விலை குறையல?!

அஞ்சலி செலுத்தியதற்குப்பின் ஜெ தீபா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். தீபா கூறியதாவது:
அதிமுகவோடு சேர்ந்து ஈடுபடுவதே எனது விருப்பம். நான் தொடங்கிய கட்சியோடு அதிமுகவில் இணைவதற்கு தயார் என வெளிப்படையாக அறிவிப்பு விட்டபோதும், அதிமுகவினர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. இது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.

நான் முழு நேர அரசியலிலிருந்து விலகவில்லை. விரைவில் எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தெரிவிப்பேன். அதிமுக அரசு இப்போதைய நேரத்தில் மந்தமாகவே உள்ளது. முறையான நிர்வாகமே இல்லை.

வாழ்க்கையில் வெங்காயத்த சாப்பிடாத இந்திய அமைச்சர்கள்!

சொல்லப்போனால் என்னை நம்ப வைத்து அதிமுகவினர் மோசம் செய்துவிட்டனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே எனக்கு அழைப்பு வருகிறது. என்னுடனிருந்த சிலரை மட்டும் அதிமுக தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி