ஆப்நகரம்

ஆளுநரை பாா்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா? ஆணையம் விசாரணை

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அப்போதைய ஆளுநா் வித்யாசாகா் ராவை பாா்த்து கை அசைத்தாரா என்று ஆணையம் விசாரணை செய்கிறது.

Samayam Tamil 11 Sep 2018, 8:56 pm
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அப்போதைய ஆளுநா் வித்யாசாகா் ராவை பாா்த்து கை அசைத்தாரா என்று ஆணையம் விசாரணை செய்கிறது.
Samayam Tamil Jayalalithaa.


முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு உயிாிழந்த நிலையில் அவரது மரணம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிரந்த தருணத்தில் அப்போதைய ஆளுநா் வித்யாசாகா் ராவ் அக்டோபா் 1, 23 ஆகிய தேதிகளில் மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை பாா்த்தாா்.

வித்யாசாகா் ராவ் மருத்துவமனைக்கு வந்திருந்த தருணத்தில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தாரா? ஆளுநா் வருவதை அவரால் உணர முடிந்ததா என்பது குறித்து வித்யாசாகா் ராவின் செயலாளா் ரமேஷ் சந்த் மீனாவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது,

மேலும் வித்யாசாகா் ராவை பாா்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா, அல்லது ஏதேனும் சைகை செய்தாரா உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இதே போன்று அப்போலோ மருத்துவா்கள் ராஜ்பிரசன்னா, விக்னேஷ் ஆகியோரும் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

அடுத்த செய்தி