ஆப்நகரம்

எல்லாத்துக்கும் மத்திய அரசு இருக்கு; தமிழக அரசுக்கு நம்பிக்கை கொடுத்த வெங்கய்யா நாயுடு

ஜெயலலிதா கனவுகளை நனவாக்க மத்திய அரசு துணைபுரியும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

TNN 14 May 2017, 11:22 am
சென்னை: ஜெயலலிதா கனவுகளை நனவாக்க மத்திய அரசு துணைபுரியும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jayalalitha dreams should be satisfied with central govt says venkaiah naidu
எல்லாத்துக்கும் மத்திய அரசு இருக்கு; தமிழக அரசுக்கு நம்பிக்கை கொடுத்த வெங்கய்யா நாயுடு


சென்னையில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். திருமங்கலம் முதல் நேரு பூங்கா இடையே வரை 7.4 கி.மீ தூரம் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பயணிக்கும். திருமங்கலம், பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட 7 வழித் தடங்களை சுரங்க மெட்ரோ ரயில் இணைக்கிறது. இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார்.

மெட்ரோ ரயில் சேவைக்கான தொடக்க விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். சென்னையில் மெட்ரோ ரயில் சேவை என்ற ஜெயலலிதாவின் கனவு நனவாகியுள்ளது என்றும், ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். பொதுமக்களின் போக்குவரத்தில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டார்.

Jayalalitha dreams should be satisfied with Central Govt says Venkaiah Naidu.

அடுத்த செய்தி