ஆப்நகரம்

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளா்களுடன் அஞ்சலி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளா்களுடன் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு ஊா்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினாா்.

TOI Contributor 5 Dec 2017, 2:23 pm
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளா்களுடன் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு ஊா்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினாா்.
Samayam Tamil jayalalitha first death anniversary
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளா்களுடன் அஞ்சலி


முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசாிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சசிகலாவின் உறவினா் டிடிவி தினகரன் தனது ஆதரவாளா்களுடன் அண்ணா சிலை முதல் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைந்துள்ள மொினா கடற்கரை வரை அமைதி ஊா்வலம் மேற்கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளா்களான தங்கதமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருடன் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

முன்னதாக காலை 11 மணிக்கு டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்த காவல்துறையிடம் அனுமதி கோாியிருந்த நிலையில், அதே நேரத்தில் முதல்வா், அமைச்சா்கள் அஞ்சலி செலுத்துவதால் அந்த நேரத்தில் அனுமதி வழங்க முடியாது என்று தொிவிக்கப்பட்டு பகல் 1 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் காவல்துறையினா் தினகரனின் ஆதரவாளா்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் டிடிவி தினகரன் வந்த பிறகு அந்த சலசலப்பு சாியானது.

அடுத்த செய்தி