உதகை: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், உதகை தாவரவியல் பூங்காவிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.
உதகை தாவரவியல் பூங்காவின் 100-வது ஆண்டு நினைவை முன்னிட்டு, கடந்த 1995-ம் ஆண்டு, 10 ஏக்கர் பரப்பில் உதகை ரோஜா பூங்கா அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப் பட்டது. இதில் ஜெயலலிதா பங்கேற்றதன் நினைவாக உதகை தாவரவியல் பூங்காவில் ஜெயலலிதாவின் பெயரை குறிக்கும் வகையில் JJ வடிவில் தூண் அமைக்கப்பட்டது. இந்த தூணில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசியாவிலேயே இப்பூங்கா சிறந்து விளங்குகிறது. கடந்த 2006-ம் ஆண்டு ஜப்பான் ஒசாகா நகரில் நடைபெற்ற சர்வதேச ரோஜா மாநாட்டில் ‘கார்டன் ஆப் தி எக்ஸ்சலன்ஸ்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த பூங்கா மேலும் 2 ஏக்கர் விரிவுபடுத்தப்பட்டு, 200 புதிய ரக ரோஜாக்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது 4,000 ஆயிரம் ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பூங்காவின் முகப்புப் பகுதியில் ரோஜா செடி நடவு செய்யப்பட்டுள்ளது. பைக்காராவில் நீர்வீழ்ச்சி மட்டுமே இருந்த நிலையில், மின் உற்பத்திக்காக தேக்கி வைக்கப் படும் நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தை ஜெயலலிதா திறந்துவைத்தார்.
Jayalalitha had a close relation with Ooty Botanical garden.
உதகை தாவரவியல் பூங்காவின் 100-வது ஆண்டு நினைவை முன்னிட்டு, கடந்த 1995-ம் ஆண்டு, 10 ஏக்கர் பரப்பில் உதகை ரோஜா பூங்கா அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப் பட்டது. இதில் ஜெயலலிதா பங்கேற்றதன் நினைவாக உதகை தாவரவியல் பூங்காவில் ஜெயலலிதாவின் பெயரை குறிக்கும் வகையில் JJ வடிவில் தூண் அமைக்கப்பட்டது. இந்த தூணில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசியாவிலேயே இப்பூங்கா சிறந்து விளங்குகிறது. கடந்த 2006-ம் ஆண்டு ஜப்பான் ஒசாகா நகரில் நடைபெற்ற சர்வதேச ரோஜா மாநாட்டில் ‘கார்டன் ஆப் தி எக்ஸ்சலன்ஸ்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த பூங்கா மேலும் 2 ஏக்கர் விரிவுபடுத்தப்பட்டு, 200 புதிய ரக ரோஜாக்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது 4,000 ஆயிரம் ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பூங்காவின் முகப்புப் பகுதியில் ரோஜா செடி நடவு செய்யப்பட்டுள்ளது. பைக்காராவில் நீர்வீழ்ச்சி மட்டுமே இருந்த நிலையில், மின் உற்பத்திக்காக தேக்கி வைக்கப் படும் நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தை ஜெயலலிதா திறந்துவைத்தார்.
Jayalalitha had a close relation with Ooty Botanical garden.