ஆப்நகரம்

சென்னை கோட்டையில் கொடியேற்றினார் முதலமைச்சர் ஜெயலலிதா

70வது சுதந்திர தினமான இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார்.

TOI Contributor 15 Aug 2016, 9:52 am
70-வது சுதந்திர தினமான இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார்.
Samayam Tamil jayalalitha hoisted the national flag in chennai fort
சென்னை கோட்டையில் கொடியேற்றினார் முதலமைச்சர் ஜெயலலிதா

பொதுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து கொண்ட அவர், நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, தங்களின் உயிரை நீத்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்தார். உண்மையான சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரம் என்று கூறிய முதல்வர் அதற்காக தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி சிறப்பாக செயல்பட்டுவருவதாக தெரிவித்தார். விவசாயிகள் நலன், மாணவர்களின் நலன் என்று பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதகாக கூறினார். சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றார். தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் 5000 ரூபாயில் இருந்து 6000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி