ஆப்நகரம்

ஜெயலலிதா இல்லம் நினைவில்லமாக மாறுமா?

வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது தொடர்பாக நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தை பற்றிய முன்அறிவிப்பு இல்லாததால் குறைவான மக்களே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Samayam Tamil 8 Dec 2018, 12:59 pm
வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது தொடர்பாக நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தை பற்றிய முன்அறிவிப்பு இல்லாததால் குறைவான மக்களே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Samayam Tamil o


தமிழகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் 5ஆம் தேதி உடல்நலக்குறைவால்மரணமடைந்தார். அவர் மறைவுக்கு பிறகு அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவில்லாமாக மாற்றும் அறிவிப்பைதமிழக அரசு 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து வேதா இல்லத்தை அளவிடும் பணிகளை சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.


இந்நிலையில் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றமக்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.மெட்ராஸ்ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் என்ற அமைப்பிடம் கருத்து கேட்கும் பொறுப்பை தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.


காலை 11 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள சமூகநலக்கூடத்தில்கருத்துகேட்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள்உட்பட அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம். மேலும் இந்த கூட்டம் இரண்டாம் கட்டமாக நாளை மறுதினமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்றுகாலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம்தொடர்பாக முறையான முன் அறிவிப்பு இல்லாததால் குறைவான மக்களே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி